Friday, July 22, 2011

வீட்டு மனைகளை எங்கு வாங்கலாம்?

நம் தமிழ் நாட்டில் இப்போது Real Estate (மனைகள் வாங்குவது/விற்ப்பது) மிகுந்த லாபகரமான தொழிலாக இருக்கிறது. மக்கள் மற்றும் தரகர்கள் வீட்டு மனைகளை வாங்கி/ விற்று நல்ல லாபம் அடைந்து வருகிறார்கள். மனைகள் விலை உயர்வதுக்கு தரகர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

சென்னையில் இப்போது வீட்டு மனைகளின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை. இது கட்டாயம் ஒரு நாள் சரிவை சந்திக்கும். ஏனென்றால் உலகலவில் பல மாநகரங்களில் இது போன்ற ஏற்றங்கள் இருதியில் சரிவை சந்தித்திருக்கின்றன. ஆதாலால் சென்னையில் வீடு மனை வாங்குவது ஆபத்தானது.

இப்போது திருச்சி, மதுரை, கோவை, சேலம், மற்றும் நெல்லை போன்ற மாநகரங்கள் Real Estate தொழிலுக்கு உகந்ததாக உள்ளன. சென்னை மற்றும் பல வெளிநாடுகளில் உள்ளவர்கள் இது போன்ற இரண்டாம் நிலை மாநகரங்களில் வீட்டு மனைகளை வாங்குகிறார்கள். இதற்கு முக்கிய காரணம், அங்கு (சென்னையில்) மனைகளின் விலை காரணமில்லாமல் உயர்ந்துள்ளதே!

இரண்டாம் நிலை மாநகரங்களில் Real Estate-ல் முதலீடு செய்வது பாதுகாப்பானது. ஏனென்றால் இங்கு Real Estate சென்னையை போன்று manipulation ஆக்கபடுவதில்லை. மற்றும் இங்கு மனைகள் சுத்தமான கிரைய பத்திரங்களுடன் உள்ளன. மேலும் இங்கு பல திட்ட பனிகள் நடந்துவருகின்றன. உதாரணமாக National Highway பல Ring road-களை அமைத்து வருகிறது. Ring road-க்கு அருகாமையில் நிலம் வாங்குவது நல்ல லாபத்தை தரும்.

இருந்தபோதிலும், நீங்கள் வீட்டு மனைகளை வாங்குவதற்கு முன்பாக சம்பத்தபட்ட எல்லா ஆவணங்களையும் சரி பார்பது மிகவும் முக்கியம்.

Thursday, July 21, 2011

பங்குச்சந்தை – உங்கள் பணத்தை சுலபமாக இழக்கும் ஒரு சந்தை

உங்களுக்கு ஒன்று தெரியுமா? பங்குச்சந்தையில் முதன் முதலில்  ஈடுபடும் பெரும்பாலோர் லாபம் அடைவார்கள். அனால், மாதங்கள் போக, போக நிகர நஷ்டத்தை அடைவார்கள். இதர்க்கு என்ன காரணம்? பங்குச்சந்தை ஒரு சூதாட்ட கலம். பங்குச்சந்தையில் ஈடுபடும் நிரைய பேர் இதை உணர்வது இல்லை, சிலர் பங்குச்சந்தையில் ஈடுபடுவதை ஒரு பொழுது போக்காக நினைக்கிறார்கள்.

பல பெரும் நிருவனங்கள் கூட பங்குச்சந்தையில் ஈடுபட்டு நஷ்டத்தை அடைந்திருக்கின்றன.

இந்திய பங்குச்சந்தை FII (Foreign Institutional Investor), MFI (Mutual Fund Investor), மற்றும் சில பெரிய முதலீட்டார்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. FII நினைத்தால், பங்குச்சந்தையை ஒரே நாளில் வீழ்வடைய செய்ய முடியும். இதன் முலம், இந்திய பங்குச்சந்தை மற்ற நாட்டு பங்குச்சந்தைகளில் இருந்து முற்றிலும் வேருபட்டது. இது பலபேர்களுக்கு தெரிவதில்லை.

நிரைய Stock Broking Institutions (ICICI, Sharekhan, மற்றும் பல) உங்களை  பங்குச்சந்தையில் ஈடுபட வற்புருத்துவார்கள். ஏன் உங்கள் நண்பர்கள் கூட Warren Buffett-ஐ உதாரணமாக எடுத்துக்காட்டி உங்களை பங்குச்சந்தையில் ஈடுபட சொல்வார்கள். Warren Buffett ஒரு அமெரிக்கர், அவர் அமெரிக்க பங்குச்சந்தையில் முதலீடு செய்து கோடிஷ்வர் ஆனார், அது அந்த காலம், அதுவில்லாமல் அது அமெரிக்கா. அங்து FII போன்ற பெரிய சூழ்ச்சிகள் செய்யும் பன்னாட்டு நிருவனங்கள் பங்குச்சந்தையை தன் வசம் கொண்டு வரவில்லை.

பங்குச்சந்தையில் பணத்தை இழக்க பல வழிகள் உள்ளன: Investment (Short Term & Long Term), Trading (Day trading, Future & Option, etc).
இதில் Investment மட்டும் ஒரு சில்ர்களுக்கு கை கொடுத்தால் கூட, அது மற்ற சேமிப்பு வழிகளை விட சிறந்தது அல்ல.

லாபம் அடைந்து விட்டால், மேலும், மேலும் லாபம் அடைய மனது துடிக்தும். கடைசில் வந்த லாபத்தையும் நீங்கள் இழக்ககூடும். நஷ்டம் அடைந்து விட்டால், அந்த நஷ்டத்தை ஈடு செய்ய மனம் துடிக்கும். கடைசியில், நீங்கள் மேலும் மேலும் நஷ்டம் அடையகூடும்.

மேலே கூறபட்ட அனைத்து கறுத்துகளும் என்னுடைய மற்றும் என் நண்பர்களின் அனுபவத்திலிருந்து வந்தவை.

ஆகையால், பங்குச்சந்தையில் ஈடுபடுவோர், அல்லது ஈடுபட நினைப்போர் தயவு செய்து இனி அதை விட்டுவிடுங்கள். உங்களின் பணத்தை Real Estate (மனைகள் வாங்குவது/விர்ப்பது), அல்லது Fixed Deposit-ல் முதலீடு செய்யுங்கள்.

Wednesday, July 20, 2011

ஜாதகம், ஜோதிடம் எல்லாம் உன்னை கெடுக்கும் மூட நம்பிக்கைகள்

எனக்கு செவ்வாய் தோழம், எனக்கு திருமணம் ஆகாது. எனக்கு ஏழரட்டை சனி, எது செய்தாலும் விலங்காது. எனக்கு ராகு-கேது சரியான இடங்களில் இல்லை, அதனால் நான் எப்போதும் துன்ப படுவேன். எனக்கு நேரம் சரியில்லை. இது போன்று பலபேர் புலம்புவதை பார்த்திருப்பீர்கள்.

ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள், இவையெல்லாம் உங்கள் நிம்மதியை கெடுக்கும் மூட நம்பிக்கைகள். நீங்கள் வாழும் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடி குறைந்து கொண்டேயிருக்கிறது. நீங்கள் சென்ற காலத்தை திரும்ப பெற முடியாது. நீங்கள் வாழும் ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக, நிம்மதியாக கழியுங்கள்.

வாழ்வின் நியதி: நாம் நல்லது செய்தால், நமக்கு நல்லதே நடக்கும். தீயது செய்தால், நமக்கு தீயதே நடக்கும். எண்ணங்கள் தூய்மாய் இருக்கட்டும், மற்றவர்களுக்கு தீமை பயக்காமல் இருக்கட்டும்.

ஒருவர் இன்பமும் துன்பமும் அவர் மனதை பொறுத்தது. ஒரு சிலர் எதையாவுது நினைத்து கொண்டு எப்போதும் சோர்வாக இருப்பார்கள், மனதில் எப்போதும் துன்ப அலை பாய்ந்து கொண்டே இருக்கும். இது ஒரு அரியாமை.

சில மத நூல்கள் உங்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்து கூருகிறது. உதாரணமாக,
நீங்கள் எதை எடுத்து வந்தீர்கள், எடுத்து செல்வதர்க்கு.


ஜாதகம், ஜோதிடத்தில் மூழ்கி கிடக்கும் தமிழனே, இவையெல்லாம் நம் முன்னோற்றத்தை கெடுக்கும் மூட நம்பிக்கைகள். இனியாவுது நீ பகுத்தறிவுடன் சந்தோஷமாக, நிம்மதியாக இருப்பாயாக!

தீண்டாமை ஒரு பெரும் பாவச்செயல்

தமிழனிடம் பல மூட நம்பிக்கைகள் பெரிகி கிடக்கிறது. இது மற்ற மானில மக்களில் உள்ளதை விட பல மடங்கு அதிகம். 300-க்கும் மேற்பட்ட ஜாதிகள், மற்றும் கணக்கு இல்லாமல் இருக்கும் சாமிகள் இதனால் மக்களிடம் ஒற்றுமை குலைந்து ஒவ்வொரு குடும்பத்தினரும் தனி மரமாக நிற்கின்றனர். நகரங்களில் வாழும் மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதில்லை. பக்கத்து வீட்டில் இருந்தும் பல மயிள்களுக்கு அப்பால் இருப்பது போல் தனிமைபட்டு கிடக்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே பறந்த மனப்பாகுடன் எல்லோரிடமும் சகஜமாக பழகி வருகிறார்கள்.

தமிழன் ஒன்று புரிந்து கொல்ல வேண்டும் ஜாதிகள் எல்லாம் செயற்கையாக உருவாக்க பட்டவை. நாம், திராவிடர்களிடம், சுய நலத்துக்காக ஆரியர்களால் புகுத்த பட்ட நங்சு தமிழனின் மனதில் பரவி கிடக்கும் விழம். இந்த விழத்தை நீக்கினால் எல்லோரும் நன்மை அடைவார்கள்.

இதை உணர்ந்து மக்கள் எல்லோரும் ஒன்று பட்டு ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து ஒற்றுமையாக வாழ வேண்டும்.

தீண்டாமை ஒரு பெரும் பாவச்செயல்.
கூடி வாழ்ந்தால் கோடி இன்பம்.

ஹிந்தி சிரிது சிரிதாக தமிழ் நாட்டை ஆக்கிரமைக்கும் அவலம்

CBSC மற்றும் ICSC என்ற இரு பாட அமைப்புகளால் தமிழ் நாட்டில் ஹிந்தி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பெரிகி கொண்டெ இருக்கிரது. 

தன் மகன்/மகள் ஹிந்தி படிப்பதை பெற்றொர்கள் பெருமையாக நினைக்கிறார்கள். ஹிந்தி படிப்பது தவறு இல்லை, அனால் தமிழை ஒதுக்குவது தவறு.

தாய் மொழி ல்வியினால் முன்னெற்றம் அடைந்த நாடுகள் பல. 
Japan, மற்றூம் China நாட்டு மக்கள் அறிவியலில் சிறந்து விலங்குகிறார்கள்.

தமிழ் ஒரு தொன்மையான மொழிஇலக்கனத்தில் பன்பற்ற மொழி, சிந்தனையை தூண்டும் மொழி, செம்மொழி! மெலும் பல.
தமிழில் படித்தால் உனக்கு அறிவு வலரும். சிந்தனை வலரும்.
ன்னை போல் தமிழில் 10-ஆம் வகுப்பு வரையாவுது படித்தவற்கள் Software, மற்றும்  Hardware துறைகளில் முன்னெற்றம் அடைந்துள்ளார்கள். தமிழில் படித்தவற்கள் எல்லா துறைகளிலும் சிறந்து விலங்குகிறார்கள். ஏன் தமிழ் சினிமா கூட ஒரு சிறந்த எடுத்துகாட்டு. மற்ற மொழி பேசும் மக்கள் தமிழனை பார்த்து பொறாமை  படுகிறார்கள், தமிழன் வலர்ச்சியை தடை செய்ய பார்கிறார்கள்.

தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும். தாய் மொழி - தமிழில் கல்வி பயில்வதனால் எற்படும் நன்மைகளை எடுத்து கூற வேண்டும். CBSC மற்றும் ICSC என்ற இரு பாட அமைப்புகளை ரத்து செய்ய வேண்டும். சமச்சிற்-கல்வியை எல்லா பள்ளிகளிலும் கொண்டு வர வேண்டும்.
இப்படி செய்தால் தமிழ் அழியாமல் என்றும் தலை நிமிர்ந்து நிர்க்கும், தமிழன் தலை நிமிர்ந்து எல்லா துறைகளிலும் சிறந்து விலங்குவான்.

இப்படி செய்யாவிட்டால், ஹிந்தி தமிழ் நாட்டையும் செல்லரித்து-விடும். இந்தியாவில் எல்லா மானிலங்களிலும் ஒவ்வொரு தாய் மொழி உள்ளது, அனால் ஹிந்தி பேசும் மக்களின் எண்ணிக்கை பெரிகி கொண்டெ பேகிறது. இதற்க்கு காரணம் மற்ற மொழிகளெல்லாம் தமிழை போன்று சிறந்த மொழிகள் அல்ல. மெலும்,  மற்ற மானிலங்களில், CBSC மற்றும் ICSC பள்ளிகள் மிக அதிகமாக உள்ளன.

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!

வாழ்க தமிழ், வளர்க தமிழ்..