நம் தமிழ் நாட்டில் இப்போது Real Estate (மனைகள் வாங்குவது/விற்ப்பது) மிகுந்த லாபகரமான தொழிலாக இருக்கிறது. மக்கள் மற்றும் தரகர்கள் வீட்டு மனைகளை வாங்கி/ விற்று நல்ல லாபம் அடைந்து வருகிறார்கள். மனைகள் விலை உயர்வதுக்கு தரகர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
சென்னையில் இப்போது வீட்டு மனைகளின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை. இது கட்டாயம் ஒரு நாள் சரிவை சந்திக்கும். ஏனென்றால் உலகலவில் பல மாநகரங்களில் இது போன்ற ஏற்றங்கள் இருதியில் சரிவை சந்தித்திருக்கின்றன. ஆதாலால் சென்னையில் வீடு மனை வாங்குவது ஆபத்தானது.
இப்போது திருச்சி, மதுரை, கோவை, சேலம், மற்றும் நெல்லை போன்ற மாநகரங்கள் Real Estate தொழிலுக்கு உகந்ததாக உள்ளன. சென்னை மற்றும் பல வெளிநாடுகளில் உள்ளவர்கள் இது போன்ற இரண்டாம் நிலை மாநகரங்களில் வீட்டு மனைகளை வாங்குகிறார்கள். இதற்கு முக்கிய காரணம், அங்கு (சென்னையில்) மனைகளின் விலை காரணமில்லாமல் உயர்ந்துள்ளதே!
இரண்டாம் நிலை மாநகரங்களில் Real Estate-ல் முதலீடு செய்வது பாதுகாப்பானது. ஏனென்றால் இங்கு Real Estate சென்னையை போன்று manipulation ஆக்கபடுவதில்லை. மற்றும் இங்கு மனைகள் சுத்தமான கிரைய பத்திரங்களுடன் உள்ளன. மேலும் இங்கு பல திட்ட பனிகள் நடந்துவருகின்றன. உதாரணமாக National Highway பல Ring road-களை அமைத்து வருகிறது. Ring road-க்கு அருகாமையில் நிலம் வாங்குவது நல்ல லாபத்தை தரும்.