Friday, August 12, 2011

பணம் சேமிக்கும் வழிகள்

1.      ஒவ்வொரு மாதமும், உங்கள் வரவு மற்றும் செலவுகளை திட்டமிட்டு செய்யுங்கள்.
2.      ஒவ்வொரு பொருளையும் வாங்குவதற்க்கு முன்பு, அது உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை ஆராய்வது மிகவும் அவசியும். நீங்கள் வாங்கும் பொருள் ஆடம்பரத்திற்க்காக இருந்தால், அதை வாங்குவதை தவிர்க்கவும்.
3.      ஒவ்வொரு பொருளையும் பேரம் பேசி வாங்குகள்.  விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முன்பு அதன் விலையை 2 அல்லது 3 கடைகளில் பேரம் பேசி வாங்குவது நல்லது.
4.      உணவு விடுதிகளில் சாப்பிடுவதை தவிர்க்கவும். அது உங்கள் பணத்தை கரைப்பது மட்டுமில்லாமல், உங்கள் உடலுக்கு பல உபாதைகளை விளைவிக்கும்.
5.      வங்கிகளில் கடன் வாங்குவதை முடிந்தவரை தவிர்க்கவும். கடன் ஆரம்பத்தில் உங்களது தேவைகளை புர்த்தி செய்தாலும், அது போக போக உங்களுக்கு வட்டி என்ற நீண்ட கால சுமையை தரும்.
6.      நீங்கள் உபயோகிக்கும் பொருள் பழுதடைந்து விட்டால், புதிய பொருளை வாங்குவதற்க்கு பதிலாக, அதே பழைய பொருளை பழுது பார்த்து உபயோகிக்கலாம்.
7.      நீங்கள் குடி பழக்கம் உள்ளவரா அல்லது புகை பிடிப்பவராக இருந்தால், குடி மற்றும் புகை பழக்கத்தை குறைத்துக்கொள்வது அல்லது முற்றிலுமாக நிறுத்திக்கொள்வது நல்லது.
8.      இரவு நேரங்களில் உங்கள் வீட்டில் உள்ள மின் விளக்குகளை தேவைபட்டால் மட்டும் உபயோகிக்கலாம். உதாரணமாக யாரும் இல்லாத அறைகளில் எரியும் விளக்குகளை அணைப்பது வீட்டிற்க்கும்/நாட்டிற்க்கும் நல்லது.
9.      குண்டு மின்சார விளக்குகளுக்கு பதிலாக U–வடிவ CFL (Compact Fluorescent Light) மின்சார விளக்குகளை உபயோகிகளாம். இவைகள் 40%-லிருந்து  60%-வரை மின்சாரத்தை சேமிக்கும்.
10.  சத்துள்ள உணவுகளை மூன்று வேலைக்கு சாப்பிட்டு, காலையிலும், மாலையிலும் உடற்பயிர்ச்சி செய்துவந்தால் உங்களுக்கு எந்தவித நோயும் அண்டாது. இது மருத்துவத்துக்காக செலவு செய்யும் பணத்தை மிச்சப்படுத்தும்.
11.  உங்கள் வீட்டு மளிகை சாமான்களை மாதத்திற்க்கு ஒரு முறை வாங்கி வைப்பது நல்லது. நீங்கள் மளிகை சாமான்களை Wholesale கடைகளில் வாங்குவது உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும். இருந்தபோதிலும் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளும் தரமாக இருக்கிறதா என்பதை ஆய்ந்து வாங்குவது நல்லது.
12.  சில மளிகை சாமான்கள் சில Offer-டன் வரும். அது போன்ற சாமான்களின் தரத்தை ஆராய்ந்து வாங்குவது நல்லது.
13.  நீங்கள் தொலைபேசிகளை உபயோகத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் தொலைபேசியில் ஒவ்வொரு முறை பேசுவதற்க்கு முன்பு, நீங்கள் அடுத்தவருக்கு என்ன தெரியபடுத்த விறும்பிகிறீர்கள் அல்லது நீங்கள் என்ன அவர்களிடமிருந்து தெரிந்துகொள்ள விறும்பிகிறீர்கள் என்பதை அராய்ந்து அதன்பின் பேசுவது நல்லது.
14.  Post-paid-ஐ விட Pre-paid plan சிறந்தது. ஏனென்றால், PrePaid-ல் நீங்கள் உங்களது தொலைபேசி இறுப்பு தொகையை ஒவ்வொரு முறை பேசி முடித்தவுடன் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இது உங்கள் பேசும் நேரத்தை கட்டுபாட்டில் வைத்திருக்கும்.
15.  நீங்கள் செல்லும் இடம் நடந்து செல்லும் தூரத்தில் இருந்தால் வாகனத்தை பயன்படுத்தாமல் நடந்து செல்வது உங்கள் பணத்தை சேமிப்பது மட்டுமில்லாமல் உங்களது உடலுக்கு ஒரு நல்ல உடற்பயிர்ச்சியாக இருக்கும்.
16.  நீங்கள் தனியாக ஒரு இடத்திற்க்கு சில வேலை காரணமாக செல்வதாக இருந்தால் 2 சக்கர வாகனத்தை பயன்படுத்தலாம். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் செல்வதாக இருந்தால் 4 சக்கர வாகனத்தை பயன்படுத்தலாம்.
17.  உங்கள் வீட்டு மின்சாரம் மற்றும் தண்ணி கட்டனங்களை கடைசி தேதிக்குள் கட்டுவது நல்லது. மேலும் அவைகளை online-ல் கட்டுவது உங்கள் வாகன எரி பொருளை சேமிக்கும்.
18.  உங்கள் வீட்டில் பயன்படுத்த படாத பழைய பொருட்களை விற்று, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து நல்ல உபயோகமான பொருட்களை வாங்களாம்.
19.  நிறைய துணிகள் மிக குறைந்த விலையில் நல்ல தரத்துடன் கிடைக்கும் போது, நீங்கள் ஏன் Branded துணிகளை வாங்க வேண்டும்? எதுக்கெடுத்தாலும் Branded துணிகளையே வாங்காதிர்கள்.
20.  உணவை ஒருபோதும் வீணாக்காதிர்கள். இது உங்களுக்கு நல்ல சேமிப்பை ஈட்டி தருவது மட்டுமில்லாமல், வீணாக்கபடாத அந்த உணவு ஏழை மக்களுக்கு மறைமுகமாக போய் சேரும் புன்னியத்தை அடைவீர்கள்.

Wednesday, August 10, 2011

ஆரோக்கிய வாழ்வே குறைவற்ற செல்வம்

எப்படி ஆரோக்கியமாக வாழ்வது? எப்படி நோய் வராமல் தவிர்ப்பது?

  1. ஒரு நாளைக்கு மூன்று முறை தவறாமல் சத்துள்ள உணவை நேரம் தவராமல் சாப்பிடுவது மிகவும் அவசியம்.
  2. உணவு உண்பதற்க்கு முன்பும், பின்பும் கை மற்றும் வாயை நன்றாக கழுவுவது மிகவும் அவசியம்.
  3. உணவு விடுதிகளில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் பிரம்மச்சாரியாக இருத்தால், நீங்களே உங்கள் உணவை சமைத்து சாப்பிடுவது நல்லது.
  4. ஆட்டு இறைச்சியை சாப்பிடுவதை தவிர்க்கவும். அதற்க்கு பதிலாக கோழி அல்லது மீன் வகை உணவுகளை சாப்பிடுவது நல்லது. Sea Food (மீன், நண்டு, இறால்) மிகவும் நல்லது.
  5. இனிப்பு பண்டங்களை தவிர்ப்பது நல்லது.
  6. சமையல் எண்ணெய் உபயோகத்தை குறைத்துக்கொள்வது நல்லது.
  7. இரண்டு அல்லது மூன்று கொழுப்பு சத்து குறைந்த சமையல் எண்ணெய்களை உபயோக படுத்துவது நல்லது. உதாரணமாக நல்லெண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்களை பயன்படுத்தலாம்.
  8. நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால், அதை மெல்ல மெல்ல நிறுத்திக்கொள்ள வேண்டும்.
  9. கொழுப்பு கரையும் ஒரே திரவம் ஆல்கஹால். வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மது அறுந்துவது நல்லது. மதுவின் அளவு 90 மில்லியை எட்டாமல் பார்த்துக்கொள்வது மிக அவசியம். போதைக்கு அடிமை ஆகிவிட கூடாது.
  10. உங்கள் உணவில் OATS பருப்பை அதிகமாக சேர்த்துக்கொண்டால் இதயம் சம்பத்தமான வியாதிகள் அண்டாது.
  11. எல்லாவற்றுக்கும் மெலாக தினமும் 1 அல்லது 2 முறை 1 மணி நேரமாவது உடற்பயிற்ச்சி செய்வதை வழக்கமாக வைத்துக்கொள்வது மிக சிறந்தது. உடற்பயிற்ச்சி செய்ய வாய்ப்பு இல்லையெனில், உடல் வியர்க்க வைக்கும் விளையாட்டில் ஈடுபடுவது நல்லது.

மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் எப்படி பின்பற்றுவது? ஒழுக்கம் உங்கள் மனதை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள வேண்டும், கடமை ஒவ்வொரு கருத்தையும் உங்களது கடமையாக கருதி தினமும் பின்பற்ற வேண்டும்.

Friday, August 5, 2011

உங்கள் பணத்தை எப்படி முதலீடு செய்து?

பணம் சம்பாதிப்பது கடினம், சம்பாதித்த பணத்தை சேமிப்பது மிக கடினம், சேமித்த பணத்தை பாதுகாப்பான முதலீடுகளில் போட்டு லாபம் அடைவது மிக மிக கடினம்.

நமது நாட்டில், நிறையபேர் வறுமை கோட்டிற்க்கு கீழே உள்ளனர், அவர்கள் 5-க்கும், 10-க்கும் மிகவும் கடினமாக உழைக்கின்றனர்கள். அவர்கள் சம்பாதித்த பணம் அவர்களின் அன்றாட வாழ்க்கையின் அடிப்படை தேவைகளுக்கே போதுமானதாக இல்லை. அவர்கள் எதிர் காலத்திற்க்காக பணம் சேமிக்க முடியாமல் தினறுகிறார்கள்.

பலர் கை நிறைய சம்பாதித்தால் கூட, பணம் சேமிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. இருந்தபோதிலும், தமிழனை மற்ற மானிலத்தவருடன் உப்பிடும் போது, நிறைய தமிழர்கள் பணத்தை  சேமிக்கிறார்கள். ஆனால், ஒரு சிலரே சேமித்த பணத்தை பாதுகாப்பான முதலீட்டில் பல மடங்கு பெருக்கி லாபம் அடைகிறார்கள்.

எல்லா முதலீடுகளிலும் அபாயங்கள் உள்ளன. ஒவ்வொரு முதலீடும் எவ்வளவு அபாயமானது, எப்போது அபாயமானது, எப்போது முதலீட்டில் லாபம் அடையலாம் என்பதை இங்கு பார்ப்போம்.

Real Estate (மனை வாங்கி விற்ப்பது) இது மிகுந்த லாபத்தை ஈட்டி தரும் முதன்மையான முதலீடு, ஆனால் மிகவும் அபாயமானது. இதில் நல்ல அனுபவம் தேவை. நீங்கள் வாங்கும் நிலம்/இடம் சுத்த கிரைய பத்திரத்துடன் உள்ளதா என்று உறுதி செய்வது மிகவும் அவசியம். நீங்கள் இடம் சம்பத்தமான நிறைய ஆவனங்களை (Sale Deed, Encumbrance Certificate, Layout Plan, Site Measurement, etc)  சரி பார்க்க வேண்டும்.

நீங்கள் எல்லா ஆவனங்களையும் சரி பார்த்து, வாங்கும் இடம் சுத்த கிரைய பத்திரத்துடன் உள்ளது என்று உறுதி செய்துவிட்டால், அதற்குபின் வேறு பெரிய ஆபத்து எதுவும் இல்லை. உங்கள் முதலீடு நிச்சயம் எதிர் காலத்தில் லாபத்தை ஈட்டி தரும்.

ஆனால் இதில் உள்ள மிக பெரிய குறை poor liquidation உங்களுக்கு உடனடியாக பணம் தேவைபட்டால், நீங்கள் உடனடியாக உங்கள் இடத்தை விற்க்க முடியாது இது ஒவ்வொரு இடத்தை பொறுத்தது.

Fixed Deposits (வங்கி சேமிப்புகள்) இதில் பெரிய லாபம் எதுவும் இல்லை என்றே சொல்லலாம். ஏனென்றால் வட்டி (Interest) என்பது தற்போது நிலவும் பணவீக்கத்தை (Inflation) பொருத்தது. இது வங்கியினால் நிற்னயிக்கபடுகிறது. உதாரணமாக இன்று 100 ரூபாய் அடுத்த வருடம் இதே நாளில் 95 ரூபாய் மதிப்புல்லதாயிருக்கும். இதற்கு அர்த்தம், நீங்கள் இன்று ஒரு பொருளை 95 ரூபாய் கொடுத்து வாங்கினால், அதே பொருளை அடுத்த வருடம் இதே நாளில் 100 ரூபாய்க்கு வாங்க வேண்டியிருக்கும்.

இதில் பெரிய ஆபத்து எதுவும் இல்லை. இருத்தபோதிலும், தனியார் வங்கிகளை விட அரசு உரிமம் பெற்ற வங்கிகளில் சேமிப்பை தொடங்குவது நல்லது, ஆபத்து குறைந்தது.

மேலும், இத்த முதலீட்டில் very high liquidation உள்ளது - உங்களுக்கு உடனடியாக பணம் தேவைபட்டால், நீங்கள் உங்களின் Fixed Deposit-close செய்து, உங்கள் பணத்தை வட்டியுடன் திரும்ப பெற முடியும்.

Company Fixed Deposits (சில நிறுவனங்களின் சேமிப்பு திட்டங்கள்) சில நிறுவனங்கள் அதிக வட்டி தரும் சேமிப்பு பத்திரங்களை அறிமுக படுத்துகின்றன. அவைகள் வங்கி FD-ஐ விட சிறந்தது. ஆனால் மிகுந்த ஆபத்தானவை. நீங்கள் சேமிப்பு பத்திரத்தை முதலீடு காலம் முடியும் வரை பாதுகாப்பாக வைக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் உங்கள் முதலீட்டை முழுவதுமாக இழக்க கூட நேரிடும்.
மற்றும் இது போன்ற சேமிப்பு பத்திரங்கள் குறைந்தது 2 அல்லது 3 வருடங்கள் Lock-in-Period-டன் வருகின்றன. அதாவது உங்களுக்கு உடனடியாக பணம் தேவைபட்டால், நீங்கள் பணத்தை திறும்ப பெற முடிவதில்லை. ஆனால் சில Company FD-கள் உங்கள் பணத்தை 3 அல்லது 4 நாட்களில் திறும்ப கொடுத்துவிடுகின்றன. மற்றும் இதில் நிலவும் ஆபத்தானது நிறுவனங்களை பொறுத்தது.

Share Market (பங்குச்சந்தை)இது மிக மிக ஆபத்து நிறைந்தது. இதில் நுழைந்த நிறைய பேர் இதற்க்கு அடிமை ஆகியுள்ளனர். முதலில் பெரும்பாலோர் லாபம் அடைவார்கள், ஆனால் போக போக நிகர நஷ்டத்தை அடைவார்கள். லாபம் அடைந்தவர்களுக்கு திரும்ப திரும்ப லாபத்தை அடைய தூண்டும், நஷ்டம் அடைந்தவர்களுக்கு நஷ்டத்திலிருந்து முதலீட்டை மீட்க தூண்டும். கடைசியில் எல்லோரும் நஷ்டத்தையே அடைவார்கள்.
நீங்கள் இதை பற்றி மேலும் தெரிந்துகொள்ள பங்குச்சந்தை உங்கள் பணத்தை சுலபமாக இழக்கும் ஒரு சந்தைஎன்ற தலைப்பில் உள்ள Post-ஐ படியுங்கள்.

Mutual Funds (பரஸ்பர நிதி நிறுவனங்கள்) இவைகள் உங்கள் பணத்தை பங்குச்சந்தையில் பல சூழ்ச்சமான முறையில் முதலீடு செய்து வறும் லாபத்தில் சிரிய பங்கை எடுத்துக்கொள்ளும் நிதி நிறுவனங்கள். இவைகள் பங்குச்சந்தையை விட சிறந்தது. ஆனால் ஒரு சில இது போன்ற நிருவனங்களே உங்களுக்கு லாபத்தை ஈட்டித்தரும். எந்த Mutual Fund நிறுவனம் சிறந்தது என்பது காலத்துக்கு, காலம் மாறும். ஏனென்றால், இது அந்த நிருவனத்தில் வேலை பார்க்கும், உங்கள் பணத்தை கையாளும் Manager-களை பொருத்தது, அவர்கள் ஒரே நிருவனத்தில் நிரந்தரமாக வேலை பார்ப்பதில்லை.

Gold and Silver (தங்கம் மற்றும் வெள்ளி) தங்கத்தின் விலை ஏரி கொண்டே போகிறது. இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை. கடந்த 10 வருடங்களாக தங்கத்தின் விலை கிடு கிடு-வென ஏரி கொண்டே இருக்கிறது. ஆகையால் இது மிகுந்த லாபத்தை ஈட்டித்தரும் நல்ல முதலீட்டு வழியாக திகழ்கிறது. தங்கத்தின் மோகம் தீரும் வரை இது ஒரு சிறந்த முதலீட்டாக தொடரும்.
வங்கிகளில் தங்க காசுகளை வாங்கி அங்கேயே Locker-ல் வைத்து பணம் தேவைபடும் போது விற்று லாபம் அடைவது தலை சிறந்த வழி. இருந்தபோதிலும் இது Real Estate-ஐ விட சிறந்தது அல்ல, பல மடங்கு லாபத்தை ஈட்டித்தருவதில்லை.

மேலே பல முதலீடு வழிகளை பார்த்தோம், இனி எப்படி முதலீடு செய்வது என்பதை பார்ப்போம்.

உங்களது எதிர்கால கடமைகளை கருத்தில் கொண்டு, உங்கள் பணத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட முதலீட்டில் போடலாம். உதாரணமாக
  1. நீங்கள் 20 லட்சம் வைத்திருந்தால், அதை 3 பாகங்களாக பிரித்து, அதில் ஒன்றை Real Estate-லும் (10 லட்சம்), ஒன்றை Gold and Silver Investment-லும் (5 லட்சம்), மற்றொன்றை Fixed Deposit-லும் (5 லட்சம்) முதலீடு செய்யலாம். ஒருபோதும் பங்குச்சந்தை  (Stock Market)-ல் முதலீடு செய்ய வேண்டாம்.

  1. நீங்கள் 1 கோடி வைத்திருந்தால், அதை 4 பாகங்களாக பிரித்து, அதில் ஒன்றை Real Estate-லும் (60 லட்சம்), ஒன்றை Gold and Silver Investment-லும் (15 லட்சம்), ஒன்றை Mutual Funds-லும் (10 லட்சம்) மற்றொன்றை Fixed Deposit-லும் (15 லட்சம்) முதலீடு செய்யலாம்.

மேலே குறிப்பிட்ட தொகைகள் உங்கள் எதிர்கால கடமைகளை பொருத்தது. உதாரணமாக உங்கள் தங்கைக்கு திருமணம் செய்து தர வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் பணத்தை Fixed Deposit-ல் அதிகமாக போடலாம்.

எப்போதும் கொஞ்சம் பணத்தையாவுது Fixed Deposit-ல் போட்டு வைப்பது நல்லது.
ஆபத்து இல்லாத முதலீடு வழி எதுவும் இல்லை.
ஆபத்தை எதிர்கொல்லாமல் ஆதாயம் அடைய முடியாது.

Friday, July 22, 2011

வீட்டு மனைகளை எங்கு வாங்கலாம்?

நம் தமிழ் நாட்டில் இப்போது Real Estate (மனைகள் வாங்குவது/விற்ப்பது) மிகுந்த லாபகரமான தொழிலாக இருக்கிறது. மக்கள் மற்றும் தரகர்கள் வீட்டு மனைகளை வாங்கி/ விற்று நல்ல லாபம் அடைந்து வருகிறார்கள். மனைகள் விலை உயர்வதுக்கு தரகர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

சென்னையில் இப்போது வீட்டு மனைகளின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை. இது கட்டாயம் ஒரு நாள் சரிவை சந்திக்கும். ஏனென்றால் உலகலவில் பல மாநகரங்களில் இது போன்ற ஏற்றங்கள் இருதியில் சரிவை சந்தித்திருக்கின்றன. ஆதாலால் சென்னையில் வீடு மனை வாங்குவது ஆபத்தானது.

இப்போது திருச்சி, மதுரை, கோவை, சேலம், மற்றும் நெல்லை போன்ற மாநகரங்கள் Real Estate தொழிலுக்கு உகந்ததாக உள்ளன. சென்னை மற்றும் பல வெளிநாடுகளில் உள்ளவர்கள் இது போன்ற இரண்டாம் நிலை மாநகரங்களில் வீட்டு மனைகளை வாங்குகிறார்கள். இதற்கு முக்கிய காரணம், அங்கு (சென்னையில்) மனைகளின் விலை காரணமில்லாமல் உயர்ந்துள்ளதே!

இரண்டாம் நிலை மாநகரங்களில் Real Estate-ல் முதலீடு செய்வது பாதுகாப்பானது. ஏனென்றால் இங்கு Real Estate சென்னையை போன்று manipulation ஆக்கபடுவதில்லை. மற்றும் இங்கு மனைகள் சுத்தமான கிரைய பத்திரங்களுடன் உள்ளன. மேலும் இங்கு பல திட்ட பனிகள் நடந்துவருகின்றன. உதாரணமாக National Highway பல Ring road-களை அமைத்து வருகிறது. Ring road-க்கு அருகாமையில் நிலம் வாங்குவது நல்ல லாபத்தை தரும்.

இருந்தபோதிலும், நீங்கள் வீட்டு மனைகளை வாங்குவதற்கு முன்பாக சம்பத்தபட்ட எல்லா ஆவணங்களையும் சரி பார்பது மிகவும் முக்கியம்.

Thursday, July 21, 2011

பங்குச்சந்தை – உங்கள் பணத்தை சுலபமாக இழக்கும் ஒரு சந்தை

உங்களுக்கு ஒன்று தெரியுமா? பங்குச்சந்தையில் முதன் முதலில்  ஈடுபடும் பெரும்பாலோர் லாபம் அடைவார்கள். அனால், மாதங்கள் போக, போக நிகர நஷ்டத்தை அடைவார்கள். இதர்க்கு என்ன காரணம்? பங்குச்சந்தை ஒரு சூதாட்ட கலம். பங்குச்சந்தையில் ஈடுபடும் நிரைய பேர் இதை உணர்வது இல்லை, சிலர் பங்குச்சந்தையில் ஈடுபடுவதை ஒரு பொழுது போக்காக நினைக்கிறார்கள்.

பல பெரும் நிருவனங்கள் கூட பங்குச்சந்தையில் ஈடுபட்டு நஷ்டத்தை அடைந்திருக்கின்றன.

இந்திய பங்குச்சந்தை FII (Foreign Institutional Investor), MFI (Mutual Fund Investor), மற்றும் சில பெரிய முதலீட்டார்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. FII நினைத்தால், பங்குச்சந்தையை ஒரே நாளில் வீழ்வடைய செய்ய முடியும். இதன் முலம், இந்திய பங்குச்சந்தை மற்ற நாட்டு பங்குச்சந்தைகளில் இருந்து முற்றிலும் வேருபட்டது. இது பலபேர்களுக்கு தெரிவதில்லை.

நிரைய Stock Broking Institutions (ICICI, Sharekhan, மற்றும் பல) உங்களை  பங்குச்சந்தையில் ஈடுபட வற்புருத்துவார்கள். ஏன் உங்கள் நண்பர்கள் கூட Warren Buffett-ஐ உதாரணமாக எடுத்துக்காட்டி உங்களை பங்குச்சந்தையில் ஈடுபட சொல்வார்கள். Warren Buffett ஒரு அமெரிக்கர், அவர் அமெரிக்க பங்குச்சந்தையில் முதலீடு செய்து கோடிஷ்வர் ஆனார், அது அந்த காலம், அதுவில்லாமல் அது அமெரிக்கா. அங்து FII போன்ற பெரிய சூழ்ச்சிகள் செய்யும் பன்னாட்டு நிருவனங்கள் பங்குச்சந்தையை தன் வசம் கொண்டு வரவில்லை.

பங்குச்சந்தையில் பணத்தை இழக்க பல வழிகள் உள்ளன: Investment (Short Term & Long Term), Trading (Day trading, Future & Option, etc).
இதில் Investment மட்டும் ஒரு சில்ர்களுக்கு கை கொடுத்தால் கூட, அது மற்ற சேமிப்பு வழிகளை விட சிறந்தது அல்ல.

லாபம் அடைந்து விட்டால், மேலும், மேலும் லாபம் அடைய மனது துடிக்தும். கடைசில் வந்த லாபத்தையும் நீங்கள் இழக்ககூடும். நஷ்டம் அடைந்து விட்டால், அந்த நஷ்டத்தை ஈடு செய்ய மனம் துடிக்கும். கடைசியில், நீங்கள் மேலும் மேலும் நஷ்டம் அடையகூடும்.

மேலே கூறபட்ட அனைத்து கறுத்துகளும் என்னுடைய மற்றும் என் நண்பர்களின் அனுபவத்திலிருந்து வந்தவை.

ஆகையால், பங்குச்சந்தையில் ஈடுபடுவோர், அல்லது ஈடுபட நினைப்போர் தயவு செய்து இனி அதை விட்டுவிடுங்கள். உங்களின் பணத்தை Real Estate (மனைகள் வாங்குவது/விர்ப்பது), அல்லது Fixed Deposit-ல் முதலீடு செய்யுங்கள்.

Wednesday, July 20, 2011

ஜாதகம், ஜோதிடம் எல்லாம் உன்னை கெடுக்கும் மூட நம்பிக்கைகள்

எனக்கு செவ்வாய் தோழம், எனக்கு திருமணம் ஆகாது. எனக்கு ஏழரட்டை சனி, எது செய்தாலும் விலங்காது. எனக்கு ராகு-கேது சரியான இடங்களில் இல்லை, அதனால் நான் எப்போதும் துன்ப படுவேன். எனக்கு நேரம் சரியில்லை. இது போன்று பலபேர் புலம்புவதை பார்த்திருப்பீர்கள்.

ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள், இவையெல்லாம் உங்கள் நிம்மதியை கெடுக்கும் மூட நம்பிக்கைகள். நீங்கள் வாழும் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடி குறைந்து கொண்டேயிருக்கிறது. நீங்கள் சென்ற காலத்தை திரும்ப பெற முடியாது. நீங்கள் வாழும் ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக, நிம்மதியாக கழியுங்கள்.

வாழ்வின் நியதி: நாம் நல்லது செய்தால், நமக்கு நல்லதே நடக்கும். தீயது செய்தால், நமக்கு தீயதே நடக்கும். எண்ணங்கள் தூய்மாய் இருக்கட்டும், மற்றவர்களுக்கு தீமை பயக்காமல் இருக்கட்டும்.

ஒருவர் இன்பமும் துன்பமும் அவர் மனதை பொறுத்தது. ஒரு சிலர் எதையாவுது நினைத்து கொண்டு எப்போதும் சோர்வாக இருப்பார்கள், மனதில் எப்போதும் துன்ப அலை பாய்ந்து கொண்டே இருக்கும். இது ஒரு அரியாமை.

சில மத நூல்கள் உங்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்து கூருகிறது. உதாரணமாக,
நீங்கள் எதை எடுத்து வந்தீர்கள், எடுத்து செல்வதர்க்கு.


ஜாதகம், ஜோதிடத்தில் மூழ்கி கிடக்கும் தமிழனே, இவையெல்லாம் நம் முன்னோற்றத்தை கெடுக்கும் மூட நம்பிக்கைகள். இனியாவுது நீ பகுத்தறிவுடன் சந்தோஷமாக, நிம்மதியாக இருப்பாயாக!

தீண்டாமை ஒரு பெரும் பாவச்செயல்

தமிழனிடம் பல மூட நம்பிக்கைகள் பெரிகி கிடக்கிறது. இது மற்ற மானில மக்களில் உள்ளதை விட பல மடங்கு அதிகம். 300-க்கும் மேற்பட்ட ஜாதிகள், மற்றும் கணக்கு இல்லாமல் இருக்கும் சாமிகள் இதனால் மக்களிடம் ஒற்றுமை குலைந்து ஒவ்வொரு குடும்பத்தினரும் தனி மரமாக நிற்கின்றனர். நகரங்களில் வாழும் மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதில்லை. பக்கத்து வீட்டில் இருந்தும் பல மயிள்களுக்கு அப்பால் இருப்பது போல் தனிமைபட்டு கிடக்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே பறந்த மனப்பாகுடன் எல்லோரிடமும் சகஜமாக பழகி வருகிறார்கள்.

தமிழன் ஒன்று புரிந்து கொல்ல வேண்டும் ஜாதிகள் எல்லாம் செயற்கையாக உருவாக்க பட்டவை. நாம், திராவிடர்களிடம், சுய நலத்துக்காக ஆரியர்களால் புகுத்த பட்ட நங்சு தமிழனின் மனதில் பரவி கிடக்கும் விழம். இந்த விழத்தை நீக்கினால் எல்லோரும் நன்மை அடைவார்கள்.

இதை உணர்ந்து மக்கள் எல்லோரும் ஒன்று பட்டு ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து ஒற்றுமையாக வாழ வேண்டும்.

தீண்டாமை ஒரு பெரும் பாவச்செயல்.
கூடி வாழ்ந்தால் கோடி இன்பம்.