Friday, August 5, 2011

உங்கள் பணத்தை எப்படி முதலீடு செய்து?

பணம் சம்பாதிப்பது கடினம், சம்பாதித்த பணத்தை சேமிப்பது மிக கடினம், சேமித்த பணத்தை பாதுகாப்பான முதலீடுகளில் போட்டு லாபம் அடைவது மிக மிக கடினம்.

நமது நாட்டில், நிறையபேர் வறுமை கோட்டிற்க்கு கீழே உள்ளனர், அவர்கள் 5-க்கும், 10-க்கும் மிகவும் கடினமாக உழைக்கின்றனர்கள். அவர்கள் சம்பாதித்த பணம் அவர்களின் அன்றாட வாழ்க்கையின் அடிப்படை தேவைகளுக்கே போதுமானதாக இல்லை. அவர்கள் எதிர் காலத்திற்க்காக பணம் சேமிக்க முடியாமல் தினறுகிறார்கள்.

பலர் கை நிறைய சம்பாதித்தால் கூட, பணம் சேமிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. இருந்தபோதிலும், தமிழனை மற்ற மானிலத்தவருடன் உப்பிடும் போது, நிறைய தமிழர்கள் பணத்தை  சேமிக்கிறார்கள். ஆனால், ஒரு சிலரே சேமித்த பணத்தை பாதுகாப்பான முதலீட்டில் பல மடங்கு பெருக்கி லாபம் அடைகிறார்கள்.

எல்லா முதலீடுகளிலும் அபாயங்கள் உள்ளன. ஒவ்வொரு முதலீடும் எவ்வளவு அபாயமானது, எப்போது அபாயமானது, எப்போது முதலீட்டில் லாபம் அடையலாம் என்பதை இங்கு பார்ப்போம்.

Real Estate (மனை வாங்கி விற்ப்பது) இது மிகுந்த லாபத்தை ஈட்டி தரும் முதன்மையான முதலீடு, ஆனால் மிகவும் அபாயமானது. இதில் நல்ல அனுபவம் தேவை. நீங்கள் வாங்கும் நிலம்/இடம் சுத்த கிரைய பத்திரத்துடன் உள்ளதா என்று உறுதி செய்வது மிகவும் அவசியம். நீங்கள் இடம் சம்பத்தமான நிறைய ஆவனங்களை (Sale Deed, Encumbrance Certificate, Layout Plan, Site Measurement, etc)  சரி பார்க்க வேண்டும்.

நீங்கள் எல்லா ஆவனங்களையும் சரி பார்த்து, வாங்கும் இடம் சுத்த கிரைய பத்திரத்துடன் உள்ளது என்று உறுதி செய்துவிட்டால், அதற்குபின் வேறு பெரிய ஆபத்து எதுவும் இல்லை. உங்கள் முதலீடு நிச்சயம் எதிர் காலத்தில் லாபத்தை ஈட்டி தரும்.

ஆனால் இதில் உள்ள மிக பெரிய குறை poor liquidation உங்களுக்கு உடனடியாக பணம் தேவைபட்டால், நீங்கள் உடனடியாக உங்கள் இடத்தை விற்க்க முடியாது இது ஒவ்வொரு இடத்தை பொறுத்தது.

Fixed Deposits (வங்கி சேமிப்புகள்) இதில் பெரிய லாபம் எதுவும் இல்லை என்றே சொல்லலாம். ஏனென்றால் வட்டி (Interest) என்பது தற்போது நிலவும் பணவீக்கத்தை (Inflation) பொருத்தது. இது வங்கியினால் நிற்னயிக்கபடுகிறது. உதாரணமாக இன்று 100 ரூபாய் அடுத்த வருடம் இதே நாளில் 95 ரூபாய் மதிப்புல்லதாயிருக்கும். இதற்கு அர்த்தம், நீங்கள் இன்று ஒரு பொருளை 95 ரூபாய் கொடுத்து வாங்கினால், அதே பொருளை அடுத்த வருடம் இதே நாளில் 100 ரூபாய்க்கு வாங்க வேண்டியிருக்கும்.

இதில் பெரிய ஆபத்து எதுவும் இல்லை. இருத்தபோதிலும், தனியார் வங்கிகளை விட அரசு உரிமம் பெற்ற வங்கிகளில் சேமிப்பை தொடங்குவது நல்லது, ஆபத்து குறைந்தது.

மேலும், இத்த முதலீட்டில் very high liquidation உள்ளது - உங்களுக்கு உடனடியாக பணம் தேவைபட்டால், நீங்கள் உங்களின் Fixed Deposit-close செய்து, உங்கள் பணத்தை வட்டியுடன் திரும்ப பெற முடியும்.

Company Fixed Deposits (சில நிறுவனங்களின் சேமிப்பு திட்டங்கள்) சில நிறுவனங்கள் அதிக வட்டி தரும் சேமிப்பு பத்திரங்களை அறிமுக படுத்துகின்றன. அவைகள் வங்கி FD-ஐ விட சிறந்தது. ஆனால் மிகுந்த ஆபத்தானவை. நீங்கள் சேமிப்பு பத்திரத்தை முதலீடு காலம் முடியும் வரை பாதுகாப்பாக வைக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் உங்கள் முதலீட்டை முழுவதுமாக இழக்க கூட நேரிடும்.
மற்றும் இது போன்ற சேமிப்பு பத்திரங்கள் குறைந்தது 2 அல்லது 3 வருடங்கள் Lock-in-Period-டன் வருகின்றன. அதாவது உங்களுக்கு உடனடியாக பணம் தேவைபட்டால், நீங்கள் பணத்தை திறும்ப பெற முடிவதில்லை. ஆனால் சில Company FD-கள் உங்கள் பணத்தை 3 அல்லது 4 நாட்களில் திறும்ப கொடுத்துவிடுகின்றன. மற்றும் இதில் நிலவும் ஆபத்தானது நிறுவனங்களை பொறுத்தது.

Share Market (பங்குச்சந்தை)இது மிக மிக ஆபத்து நிறைந்தது. இதில் நுழைந்த நிறைய பேர் இதற்க்கு அடிமை ஆகியுள்ளனர். முதலில் பெரும்பாலோர் லாபம் அடைவார்கள், ஆனால் போக போக நிகர நஷ்டத்தை அடைவார்கள். லாபம் அடைந்தவர்களுக்கு திரும்ப திரும்ப லாபத்தை அடைய தூண்டும், நஷ்டம் அடைந்தவர்களுக்கு நஷ்டத்திலிருந்து முதலீட்டை மீட்க தூண்டும். கடைசியில் எல்லோரும் நஷ்டத்தையே அடைவார்கள்.
நீங்கள் இதை பற்றி மேலும் தெரிந்துகொள்ள பங்குச்சந்தை உங்கள் பணத்தை சுலபமாக இழக்கும் ஒரு சந்தைஎன்ற தலைப்பில் உள்ள Post-ஐ படியுங்கள்.

Mutual Funds (பரஸ்பர நிதி நிறுவனங்கள்) இவைகள் உங்கள் பணத்தை பங்குச்சந்தையில் பல சூழ்ச்சமான முறையில் முதலீடு செய்து வறும் லாபத்தில் சிரிய பங்கை எடுத்துக்கொள்ளும் நிதி நிறுவனங்கள். இவைகள் பங்குச்சந்தையை விட சிறந்தது. ஆனால் ஒரு சில இது போன்ற நிருவனங்களே உங்களுக்கு லாபத்தை ஈட்டித்தரும். எந்த Mutual Fund நிறுவனம் சிறந்தது என்பது காலத்துக்கு, காலம் மாறும். ஏனென்றால், இது அந்த நிருவனத்தில் வேலை பார்க்கும், உங்கள் பணத்தை கையாளும் Manager-களை பொருத்தது, அவர்கள் ஒரே நிருவனத்தில் நிரந்தரமாக வேலை பார்ப்பதில்லை.

Gold and Silver (தங்கம் மற்றும் வெள்ளி) தங்கத்தின் விலை ஏரி கொண்டே போகிறது. இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை. கடந்த 10 வருடங்களாக தங்கத்தின் விலை கிடு கிடு-வென ஏரி கொண்டே இருக்கிறது. ஆகையால் இது மிகுந்த லாபத்தை ஈட்டித்தரும் நல்ல முதலீட்டு வழியாக திகழ்கிறது. தங்கத்தின் மோகம் தீரும் வரை இது ஒரு சிறந்த முதலீட்டாக தொடரும்.
வங்கிகளில் தங்க காசுகளை வாங்கி அங்கேயே Locker-ல் வைத்து பணம் தேவைபடும் போது விற்று லாபம் அடைவது தலை சிறந்த வழி. இருந்தபோதிலும் இது Real Estate-ஐ விட சிறந்தது அல்ல, பல மடங்கு லாபத்தை ஈட்டித்தருவதில்லை.

மேலே பல முதலீடு வழிகளை பார்த்தோம், இனி எப்படி முதலீடு செய்வது என்பதை பார்ப்போம்.

உங்களது எதிர்கால கடமைகளை கருத்தில் கொண்டு, உங்கள் பணத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட முதலீட்டில் போடலாம். உதாரணமாக
  1. நீங்கள் 20 லட்சம் வைத்திருந்தால், அதை 3 பாகங்களாக பிரித்து, அதில் ஒன்றை Real Estate-லும் (10 லட்சம்), ஒன்றை Gold and Silver Investment-லும் (5 லட்சம்), மற்றொன்றை Fixed Deposit-லும் (5 லட்சம்) முதலீடு செய்யலாம். ஒருபோதும் பங்குச்சந்தை  (Stock Market)-ல் முதலீடு செய்ய வேண்டாம்.

  1. நீங்கள் 1 கோடி வைத்திருந்தால், அதை 4 பாகங்களாக பிரித்து, அதில் ஒன்றை Real Estate-லும் (60 லட்சம்), ஒன்றை Gold and Silver Investment-லும் (15 லட்சம்), ஒன்றை Mutual Funds-லும் (10 லட்சம்) மற்றொன்றை Fixed Deposit-லும் (15 லட்சம்) முதலீடு செய்யலாம்.

மேலே குறிப்பிட்ட தொகைகள் உங்கள் எதிர்கால கடமைகளை பொருத்தது. உதாரணமாக உங்கள் தங்கைக்கு திருமணம் செய்து தர வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் பணத்தை Fixed Deposit-ல் அதிகமாக போடலாம்.

எப்போதும் கொஞ்சம் பணத்தையாவுது Fixed Deposit-ல் போட்டு வைப்பது நல்லது.
ஆபத்து இல்லாத முதலீடு வழி எதுவும் இல்லை.
ஆபத்தை எதிர்கொல்லாமல் ஆதாயம் அடைய முடியாது.

1 comment:

  1. பணம் சம்பாதிக்க யாராலும் முடியாமல் இல்லை. ஆனால் பலருக்கும் அதற்கான வழிகள் தெரியவில்லை என்பது தான் உண்மை. பணத்தைப் பற்றிய கல்வி நமக்கு இல்லாததாலும், பணத்தைப் பொறுத்த நம் கண்ணோட்டம் தவறாக இருப்பதாலும் தான் பணம் என்பது இன்று நமக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் அல்லது நமது குடும்பத்தில் உள்ளவர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்தவற்றை வைத்தே நாம் பணம் சம்பாதிப்பதைப்பற்றி யோசிக்கிறோம். ஆனால் காலம் காலமாக வேலை செய்வதற்கு சொல்லிக்கொடுத்த அளவிற்கு யாரும் நமக்கோ அல்லது நமது முன்னோர்களுக்கோ பணம் சம்பாதிப்பதைப்பற்றி சொல்லிக்கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. இன்று நம்மில் பலர் வறுமையில் இருப்பதற்குக் காரணம் பணம் பற்றிய அறிவு இல்லாததே ஆகும். பணக்காரர்கள் தங்கள் வாரிசுகளுக்கு மட்டுமே கற்றுத் தரக்கூடிய பணம் சேர்க்கும் வித்தைகளை ஒருசிலர் மட்டுமே உலகத்திற்கு எடுத்துக்கூறி உள்ளனர். அந்த இரகசியங்களை எங்கு, எப்படிப் பெறுவது என்பதை அறிய விரும்பினால் secretsinmoneymaking@yahoo.com என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பவும்.

    ReplyDelete